தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகத்தில் அடுத்தடுத்த போராட்டங்களால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய படங்கள் வெளிவராததால் வசூல் பார்க்க முடியாமல் தயாரிப்பாளர்களும், படங்களை பார்க்க முடியாததால் பொழுதுபோக்க முடியாமல் ரசிகர்களும் தவித்து வருகிறார்கள்.
இந்த போராட்ட சமயத்தில் எந்தத் தயாரிப்பாளரும் எந்த ஒரு விழாவையும் நடத்தக் கூடாது என தயாரிப்பாளர்களுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பித்திருந்தது. அதையும் மீறி ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பாளரான கே.ஈ.ஞானவேல்ராஜா நோட்டா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை கடந்த வாரம் நடத்தினார். அதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அவருக்கு ரெட் போடப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
விழா நடத்தியது குறித்து தயாரிப்பாளர் சங்கம் கேட்ட விளக்கத்திற்கு கே.ஈ.ஞானவேல்ராஜா பதிலளித்துவிட்டதாகவும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றுதான் தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டதன் பேரில் ஞானவேல்ராஜாவும் நோட்டா படப்பிடிப்பைத் தள்ளி வைத்துவிட்டாராம்.