பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. தமிழ் பாடல்களுக்குத் தனியாகவும், தெலுங்குப் பாடல்களுக்குத் தனியாகவும் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
ஒவ்வொரு பாடலைப் பாடும் போதும், அந்தப் பாடல் தொடர்பான விவரங்களைப் பற்றியும் அவர் சுவாரசியமான தகவல்களைக் வறி வருகிறார். நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடல்களுக்கு இடையில் அவர் பேசிய போது, நீண்ட தூரப் பயணங்களுக்கு நான்தானே உங்க கூட வர்றேன் என பெருமிதத்துடன் பேசினார்.
“ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு கதை சொன்னால், அதுவே பெரிய நிகழ்ச்சியா இருக்கும். ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கதை இருக்கு. அது வேண்டாம், நமக்கு கதையா வேணும், இசைதானே வேணும்.
எவ்வளவு பேரு படத்தை ஞாபகம் வச்சிக்கிட்டு, பாட்டு கேட்கறீங்க, கிடையவே கிடையாது. இப்ப, பாட்டைக் கேட்டீங்கன்னா விஷூவல் ஞாபகத்துக்கு வராது. அங்க பார்க்கிற நேரத்துல கைதட்டறீங்க. இங்க வந்து பாட்டைக் கேட்டதும் அந்த டியூனோட ஒன்றி, உங்களையும் மறந்துடறீங்க.
உங்க வாழ்க்கையோட ஒவ்வொரு சம்பவத்துலயும், இந்தப் பாடல்கள், இந்த இசை இருக்கு. இங்க இருந்து 200 கிலோமீட்டர் கார் போனீங்கன்னா, நான்தானே உங்க கூட வர்றேன். அந்தப் பாடல்கள் இல்லாம நீங்க வாழவே முடியாது,” என்று பலத்த ஆரவாரத்துக்கிடையே தெரிவித்தார்.