ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. தமிழ் பாடல்களுக்குத் தனியாகவும், தெலுங்குப் பாடல்களுக்குத் தனியாகவும் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
ஒவ்வொரு பாடலைப் பாடும் போதும், அந்தப் பாடல் தொடர்பான விவரங்களைப் பற்றியும் அவர் சுவாரசியமான தகவல்களைக் வறி வருகிறார். நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடல்களுக்கு இடையில் அவர் பேசிய போது, நீண்ட தூரப் பயணங்களுக்கு நான்தானே உங்க கூட வர்றேன் என பெருமிதத்துடன் பேசினார்.
“ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு கதை சொன்னால், அதுவே பெரிய நிகழ்ச்சியா இருக்கும். ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கதை இருக்கு. அது வேண்டாம், நமக்கு கதையா வேணும், இசைதானே வேணும்.
எவ்வளவு பேரு படத்தை ஞாபகம் வச்சிக்கிட்டு, பாட்டு கேட்கறீங்க, கிடையவே கிடையாது. இப்ப, பாட்டைக் கேட்டீங்கன்னா விஷூவல் ஞாபகத்துக்கு வராது. அங்க பார்க்கிற நேரத்துல கைதட்டறீங்க. இங்க வந்து பாட்டைக் கேட்டதும் அந்த டியூனோட ஒன்றி, உங்களையும் மறந்துடறீங்க.
உங்க வாழ்க்கையோட ஒவ்வொரு சம்பவத்துலயும், இந்தப் பாடல்கள், இந்த இசை இருக்கு. இங்க இருந்து 200 கிலோமீட்டர் கார் போனீங்கன்னா, நான்தானே உங்க கூட வர்றேன். அந்தப் பாடல்கள் இல்லாம நீங்க வாழவே முடியாது,” என்று பலத்த ஆரவாரத்துக்கிடையே தெரிவித்தார்.