கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. தமிழ் பாடல்களுக்குத் தனியாகவும், தெலுங்குப் பாடல்களுக்குத் தனியாகவும் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
ஒவ்வொரு பாடலைப் பாடும் போதும், அந்தப் பாடல் தொடர்பான விவரங்களைப் பற்றியும் அவர் சுவாரசியமான தகவல்களைக் வறி வருகிறார். நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடல்களுக்கு இடையில் அவர் பேசிய போது, நீண்ட தூரப் பயணங்களுக்கு நான்தானே உங்க கூட வர்றேன் என பெருமிதத்துடன் பேசினார்.
“ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு கதை சொன்னால், அதுவே பெரிய நிகழ்ச்சியா இருக்கும். ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கதை இருக்கு. அது வேண்டாம், நமக்கு கதையா வேணும், இசைதானே வேணும்.
எவ்வளவு பேரு படத்தை ஞாபகம் வச்சிக்கிட்டு, பாட்டு கேட்கறீங்க, கிடையவே கிடையாது. இப்ப, பாட்டைக் கேட்டீங்கன்னா விஷூவல் ஞாபகத்துக்கு வராது. அங்க பார்க்கிற நேரத்துல கைதட்டறீங்க. இங்க வந்து பாட்டைக் கேட்டதும் அந்த டியூனோட ஒன்றி, உங்களையும் மறந்துடறீங்க.
உங்க வாழ்க்கையோட ஒவ்வொரு சம்பவத்துலயும், இந்தப் பாடல்கள், இந்த இசை இருக்கு. இங்க இருந்து 200 கிலோமீட்டர் கார் போனீங்கன்னா, நான்தானே உங்க கூட வர்றேன். அந்தப் பாடல்கள் இல்லாம நீங்க வாழவே முடியாது,” என்று பலத்த ஆரவாரத்துக்கிடையே தெரிவித்தார்.