ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புருவத்தை அசைத்து அசைத்தே இந்திய ரசிகர்களைக் கிறங்கடித்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். அதன் பிறகு புருவ அழகி என்று சொல்லப்படும் அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார். அவரைப் பல நடிகர்கள், நடிகைகள் பாராட்டி அவருடைய ரசிகர்களாகவும் மாறினார்கள். பிரியா வாரியரின் தாக்கம் ஹிந்தித் திரையுலகிலும் எதிரொலித்தது. ரிஷி கபூர் வரை கவர்ந்தார் பிரியா.
தற்போது பிரியாவுக்கு ஹிந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஹிந்தித் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோஹர் தயாரிப்பில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தின் இயக்குனர் ரோகித் ஷெட்டி இயக்க உள்ள 'சிம்பா' படத்தில் நாயகியாக நடிக்க பிரியா வாரியரிடம் பேசி வருகிறார்களாம். இப்படத்தின் நாயகனாக ரன்வீர் சிங் நடிக்க உள்ளார்.
இன்னும் பிரியா வாரியர் நடித்து ஒரு படம் கூட வெளிவராத நிலையில் அவரைத் தேடி ஹிந்திப் பட வாய்ப்பு வந்துள்ளது ஆச்சரியமானதுதான்.