அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
புருவத்தை அசைத்து அசைத்தே இந்திய ரசிகர்களைக் கிறங்கடித்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். அதன் பிறகு புருவ அழகி என்று சொல்லப்படும் அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார். அவரைப் பல நடிகர்கள், நடிகைகள் பாராட்டி அவருடைய ரசிகர்களாகவும் மாறினார்கள். பிரியா வாரியரின் தாக்கம் ஹிந்தித் திரையுலகிலும் எதிரொலித்தது. ரிஷி கபூர் வரை கவர்ந்தார் பிரியா.
தற்போது பிரியாவுக்கு ஹிந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஹிந்தித் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோஹர் தயாரிப்பில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தின் இயக்குனர் ரோகித் ஷெட்டி இயக்க உள்ள 'சிம்பா' படத்தில் நாயகியாக நடிக்க பிரியா வாரியரிடம் பேசி வருகிறார்களாம். இப்படத்தின் நாயகனாக ரன்வீர் சிங் நடிக்க உள்ளார்.
இன்னும் பிரியா வாரியர் நடித்து ஒரு படம் கூட வெளிவராத நிலையில் அவரைத் தேடி ஹிந்திப் பட வாய்ப்பு வந்துள்ளது ஆச்சரியமானதுதான்.