இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் துபாயில் மரணம் அடைந்தார். 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மும்பை கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. தொடர்ந்து சென்னையில் அவரது அஸ்தி கடலில் கரைக்கப்பட்டது.
ஸ்ரீதேவிக்கு தெலுங்கு திரையுலகம் சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதேப்போன்று சென்னையில், நேற்று ஸ்ரீதேவிக்கு அஞ்சலி கூட்டம் நடந்தது. சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த கூட்டத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் குடும்பத்தார், அரசியல் பிரமுகர் அமர் சிங் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
பழம்பெரும் நடிகை லதா, தயாரிப்பாளர் தாணு, ஏ.ஆர்.ரஹ்மான், இவரின் மனைவி, மீனா, ராதிகா, வினித், கே.எஸ்.ரவிக்குமார், சுஹாசினி, சோனியா அகர்வால், பிரபுதேவா, ஸ்ரீகாந்த், குட்டி பத்மினி, ரோகினி, பாக்யராஜ், கார்த்தி, சினேகா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பங்கேற்று ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவரின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினர்.
ஸ்ரீதேவி அஞ்சலி கூட்டம் நடந்த ஹால் முழுக்க வண்ண மலர்கள் அங்கரிக்கப்பட்டிருந்தது.