வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட துறைகள் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு இமயமலையில் உள்ள பாபாஜியை தரிசித்து விட்டு வந்து முடிவெடுப்பது ரஜினியின் நீண்டகால பாலிஸியாக இருந்து வருகிறது. அந்த வகையில், விரைவில் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பினை வெளியிடும் ரஜினி, முன்னதாக நேற்று இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது அவரை விமான நிலையத்தில் மீடியாவினர் முற்றுகையிட்டு கேள்விகள் எழுப்பினர். அப்போது ரஜினி, தான் இமயமலைக்கு பாபாஜியை தரிசிக்க செல்வதாக சொன்னார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பெண்களுக்கு நிலவி வரும் பாதுகாப்பற்ற சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து அவரிடம் மீடியாக்கள் கேள்விகள் எழுப்பினர்.
ஆனால் அதற்கு ரஜினி பதில் சொல்ல விரும்பாமல் இப்போது எதுவும் வேண்டாம். நான் இமய மலைக்கு சென்று கொண்டிருக்கிறேன். அப்புறம் பார்க்கலாம். வணக்கம் என்று சொல்லிவிட்டு வேகமாக புறப்பட்டுச்சென்று விட்டார்.