இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட துறைகள் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு இமயமலையில் உள்ள பாபாஜியை தரிசித்து விட்டு வந்து முடிவெடுப்பது ரஜினியின் நீண்டகால பாலிஸியாக இருந்து வருகிறது. அந்த வகையில், விரைவில் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பினை வெளியிடும் ரஜினி, முன்னதாக நேற்று இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது அவரை விமான நிலையத்தில் மீடியாவினர் முற்றுகையிட்டு கேள்விகள் எழுப்பினர். அப்போது ரஜினி, தான் இமயமலைக்கு பாபாஜியை தரிசிக்க செல்வதாக சொன்னார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பெண்களுக்கு நிலவி வரும் பாதுகாப்பற்ற சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து அவரிடம் மீடியாக்கள் கேள்விகள் எழுப்பினர்.
ஆனால் அதற்கு ரஜினி பதில் சொல்ல விரும்பாமல் இப்போது எதுவும் வேண்டாம். நான் இமய மலைக்கு சென்று கொண்டிருக்கிறேன். அப்புறம் பார்க்கலாம். வணக்கம் என்று சொல்லிவிட்டு வேகமாக புறப்பட்டுச்சென்று விட்டார்.