'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட துறைகள் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு இமயமலையில் உள்ள பாபாஜியை தரிசித்து விட்டு வந்து முடிவெடுப்பது ரஜினியின் நீண்டகால பாலிஸியாக இருந்து வருகிறது. அந்த வகையில், விரைவில் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பினை வெளியிடும் ரஜினி, முன்னதாக நேற்று இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது அவரை விமான நிலையத்தில் மீடியாவினர் முற்றுகையிட்டு கேள்விகள் எழுப்பினர். அப்போது ரஜினி, தான் இமயமலைக்கு பாபாஜியை தரிசிக்க செல்வதாக சொன்னார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பெண்களுக்கு நிலவி வரும் பாதுகாப்பற்ற சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து அவரிடம் மீடியாக்கள் கேள்விகள் எழுப்பினர்.
ஆனால் அதற்கு ரஜினி பதில் சொல்ல விரும்பாமல் இப்போது எதுவும் வேண்டாம். நான் இமய மலைக்கு சென்று கொண்டிருக்கிறேன். அப்புறம் பார்க்கலாம். வணக்கம் என்று சொல்லிவிட்டு வேகமாக புறப்பட்டுச்சென்று விட்டார்.