இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கும், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்சய்க்கும் இருதினங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ரஜினி, கமல், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்களை மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து புதுமண தம்பதியர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது பேசிய கீர்த்தனா, நானும் அக்சயும் சென்னை லயோலா கல்லூரியில் ஒன்றாக விஸ்காம் படித்தோம். இரண்டு பேருக்கும் நல்ல புரிதல் இருந்தது. நான் மணிசாரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். அக்சய் பீட்சா படத்தை ஹிந்தியில் எடுத்தார். என்னை விட ரொம்ப புத்திசாலி அக்ஷய்.
எங்கள் திருமணம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது நான் சில கதைகள் தயார் செய்து வருகிறேன். அக்சய்யும் கதை எழுதி வருகிறார், என்றவரிடம், புஷ்கர் காயத்ரி போல் இரண்டு பேரும் சேர்ந்து படம் இயக்குவீர்களா என்றால், நான் அவருக்கு படங்களில் உதவி செய்வேன், மற்றபடி சேர்ந்து படம் இயக்குவது பற்றி இப்போது முடிவு செய்யவில்லை என்கிறார். மணிரத்னம் எப்போது அழைத்தாலும் உதவி இயக்குநராக வேலை செய்வேன்.