'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
தமிழ்த் திரையுலகத்தில் திடீரென ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த போராட்டங்களால் பல வேலைகள் தடுமாற்றத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. அனைத்து தயாரிப்பாளர்களும் வரும் மார்ச் 16-ம் தேதி முதல் படப்பிடிப்பு மற்றும் இறுதிக் கட்டப் பணிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தினரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அமெரிக்காவில் நடைபெற்று வரும் '2.0' படத்திற்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை. ஏற்கெனவே, அந்தப் படத்தின் வேலைகள் தாமதமாகி படத்தின் வெளியீடு எப்போது என்று சொல்ல முடியாதபடி தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கிறது.
தற்போது விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதியின் பல படங்கள், சிவகார்த்திகேயன் படம் என பலரது படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. அவை அனைத்தும் நிறுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
அஜித் அடுத்து நடிக்க உள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23ம் தேதி முதல் ஆரம்பமாவதாக இருந்தது. அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பால் தற்போது 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பையும் தள்ளிப் போடத்தான் வேண்டும்.
அஜித் எந்த சங்கத்தின் கட்டுப்பாட்டையும் மதிக்காதவர், அதே சமயம் தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாட்டை ஏற்று அவரது படத்தின் படப்பிடிப்பைத் தள்ளிப் போடுவாரா என்று மற்றவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.