இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
தமிழ்த் திரையுலகம் நீண்ட நெடியதொரு போராட்டத்திற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இது ஏதோ பேருக்கு நடத்தக் கூடிய போராட்டம் அல்ல, மொத்த பிரச்னைகளையும் தீர்த்து, புதிய சகாப்தத்தை உருவாக்க நடத்தும் போராட்டம் என தயாரிப்பாளர் சங்கத் தரப்பிலிருந்து தெரிவிக்கின்றனர்.
பல கோடி கொடுத்து தியேட்டர்களைக் கட்டும் தியேட்டர் முதலாளிகளிடம் டிஜிட்டல் நிறுவனங்கள், முறையற்ற ஒப்பந்தங்களைப் போட்டுள்ளதன் பலனாக, படங்கள் தியேட்டர்களில் ஓடுவதற்குக் கூட தயாரிப்பாளர்கள் தான் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதை குறைக்கவும், நீக்கவும் தான் தயாரிப்பாளர்கள் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். ஆனால், தியேட்டர்காரர்கள் அவர்களது வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூட முடிவெடுத்துள்ளார்கள்.
இதனால், மார்ச் கடைசியில் மற்றும் ஏப்ரல் மாதம் முதல் இரண்டு வாரங்களில் வெளியிட திட்டமிட்ட படங்களின் வெளியீடு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், பட வெளியீடுகளையும் பிரச்சினைகள் முடிந்த பின் திருத்தியமைக்க முடிவு செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 27ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட காலா படம் கூட தள்ளிப் போக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
காலா படம் வரும் போது தியேட்டர்காரர்கள் அவர்களது ஸ்டிரைக்கை முடித்துக் கொள்ள முடிவெடுத்திருந்தார்களாம். இப்போது காலா தள்ளிப் போவதால் அவர்களும் ஸ்டிரைக்கை நீட்டிக்க வேண்டிய நிலைமை உருவாகும்.
படப்பிடிப்புகள் மற்ற பணிகள் அனைத்தையும் மற்ற தயாரிப்பாளர்கள் நிறுத்த வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் மிகவும் கண்டிப்புடன் கூறியுள்ளதாம். இந்தப் பிரச்சினைகள் முடிவடைந்தால் திரையுலகத்தில் பல நன்மைகள் உருவாகும் என அனைவருக்கும் அவர்கள் விளக்கி வருகிறார்களாம்.