‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
'அரிமா நம்பி, இருமுகன்' ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் அடுத்து இயக்கும் படம் 'நோட்டா'. தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொன்டா இப்படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் நாயகியாக நடித்த மெஹ்ரீன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் ஆரம்பமாகிறது.
இப்படம் ஷான் கருப்புசாமி எழுதிய 'வெட்டாட்டம்' நாவலை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக ஒரு பேச்சு உலவி வருகிறது. இந்த நாவல் அரசியல் களத்தைக் கொண்ட ஒரு கதை. விருப்பமே இல்லாமல் முதல்வர் பதவியை ஏற்க நேரிடும் ஒரு இளைஞன், அவனுடைய திறமையால் எப்படி அந்தப் பதவியைத் தக்க வைத்துக் கொள்கிறான் என்பதுதான் நாவலின் ஒரு வரிக் கதை. ஒரு பரபரப்பான அரசியல் கதையாக அமைந்த இந்த நாவல் பலரது பாராட்டுக்களைப் பெற்ற ஒரு நாவல். இந்த நாவல்தான் 'நோட்டா' படமாக உருமாற உள்ளதாக நேற்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
ஆனால், நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் ஆனந்த் சங்கர், “அரசியல் பற்றிய பல அறிவான விஷயங்களை படத்தில் வைக்க வேண்டும் என்பதால் ஷான் கருப்புசாமி படத்தின் கதையை எழுதியிருக்கிறார்,” என்றார்.
எப்படியிருந்தாலும் படம் வெளிவரும் போது அது என்ன கதை என்பது தெரிந்துவிடப் போகிறது.