விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
சமந்தா- நாகசைதன்யா ஆகிய இருவரும் ஏ மாயா சேசனா, மனம், ஆட்டோ நகர் சூர்யா ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே காதல் உருவானது. அதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் சமந்தா நடிப்பை தொடர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கும் அவர், இரும்பு திரை, மகாநதி, யுடர்ன் கன்னட ரீமேக் என பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நாகசைதன்யா - சமந்தா ஆகிய இருவரும் தெலுங்கில் நின்னுகோரி படத்தை இயக்கிய சிவா நிர்வனா இயக்கும் படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். நாகசைதன்யா நடித்து வரும் ஷவ்யா சச்சி படப்பிடிப்பு முடிந்ததும் அவர் சமந்தாவுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.