ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது ஒரு அசாதாரணமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால், அவற்றைப் பற்றி பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் கண்டு கொள்ளவேயில்லை. அதிலும், அரசியலில் இறங்கி மக்களுக்கு நல்லது செய்யப் போவதாகச் சொல்லி வரும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இந்தப் பிரச்சினை குறித்து வாய் திறக்காமல் உள்ளார்கள்.
கடந்த 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் தமிழ்ப் படங்கள் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்கள் ஆகியவற்றை வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே எழுந்த கட்டணப் பிரச்சினையால் எழுந்த விவகாரம் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது. மற்ற தென்னிந்திய மாநிலங்கள் அவர்களுடைய ஸ்டிரைக்கை கைவிட்டுவிட்டன. ஆனால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கட்டணக் குறைப்பு போதவில்லை என போராட்டத்தை நீட்டித்துள்ளார்கள்.
இதனிடையே, நேற்று கூடிய தியேட்டர்காரர்கள் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்து வரும் 16ம் தேதி முதல் தியேட்டர்களை மூடப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால், திரையுலகத்தில் படப்பிடிப்பு தவிர மற்ற விஷயங்கள் நடைபெறாமல் நிற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், எந்த திரைப்பட விழாக்களையும் நடத்தக் கூடாதென தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழ்த் திரையுலகம் இதுவரை காணாத ஒரு நிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கையில், சமீபத்திய அரசியல்வாதிகளான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டால்தான் பிரச்சினை முடிவுக்கு வரும் என திரையுலகத்தில் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளுக்கு முன் அவர்கள் சார்ந்த துறை பிரச்சினையை அவர்கள் இருவரும் தீர்ப்பார்களா ?.