இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தியேட்டர்களில் படங்களை திரையிட கியூப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கியூப் கட்டணத்தை அந்த நிறுவனங்கள் அதிகரித்துள்ளது. அதனை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த 1ந் தேதி முதல் புதிய படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இதனால் ரிலீசுக்கு தயாராக உள்ள 40க்கும் மேற்பட்ட படங்கள் ஸ்தம்பித்துள்ளது. இந்த தடையால் தியேட்டருக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று கூடிய தியேட்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் 8 சதவிகித கேளிக்கை வரி ரத்து உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதை நிறைவேற்றாவிட்டால் வருகிற 16ந் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்த தயாரிப்பாளர் சங்கம், இனி திரைப்படம் சம்பந்தமாக எந்தவித விழாக்களோ, பத்திரிகையாளர்கள் சந்திப்போ நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டது. அதன் காரணமாக இன்று காலை நடைபெறுவதாக இருந்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த தடை குறித்து தயாரிப்பாளர் சங்கம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
"பட வெளியீட்டுக்கு தடை உள்ள நிலையில் பட விழாக்களும், பத்திரிகையாளர் சந்திப்பும் நடப்பது பட வெளியீட்டை நோக்கி படத்தை நகர்த்துவதாக இருக்கும். இதனால் பணம் செலவு செய்து விழா நடத்தும் தயாரிப்பாளருக்கு படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் உருவாகும். இது எந்த நோக்கத்துக்காக இந்த போராட்டம் நடக்கிறதோ அதை மழுங்கடிப்பதாக இருக்கும். அதனால்தான் திரைப்பட விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை முறைப்படி அறிவிக்கலாமா அதற்கு சங்க விதிகள் இடம் கொடுக்கிறதா என்பதை ஆராய்ந்து வருகிறோம்" என்றார் தயாரிப்பாளர் சங்க முக்கிய நிர்வாகி ஒருவர்.