ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏன்டா தலையில எண்ணெய் வக்கல என்ற வித்தியாசமான தலைப்பின் மூலம், கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளவர், இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். குறும்படங்களை இயக்கிய அனுபவம் மூலம், வெள்ளித்திரைக்கு வந்தவர்.அவர் கூறியதாவது:
படங்களுக்கு, தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பது தான், என் ஆசை. ஆனால், இதுபோன்ற பேச்சு வழக்கிலான பெயர் வைக்கும் போது, அது, மக்களிடையே எளிதில் சென்றடைந்து விடுகிறது.பீட்சா போன்ற படங்கள் தான், குறும்பட இயக்குனர்களை தமிழ் சினிமாவில் அடையாளம் காட்டின. அதனால் தான், வித்தியாசமான படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்தன. தமிழ் சினிமா இன்னும் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும். குறும்படங்களில் வெற்றிக்கு காரணம் இளம் பெண்கள் தான். அவர்களால் நினைத்த போது தியேட்டருக்கு வர முடியாது. அதனால், அவர்களின் பொழுதுபோக்கு, இணையதளம் தான். அதனாலேயே அவர்களுக்கு பிடித்த மாதிரி காதல் உள்ளிட்ட அம்சங்களுடன்குறும்படங்கள் உருவாகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.