ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குனர் மணிரத்னத்தை பொறுத்தவரை கதைக்கு தேவையான சின்ன நடிகர்கள் வேறு எந்த மொழியில் இருந்தாலும் தேடிப்பிடித்து அழைத்து வந்துவிடுவார். அப்படித்தான் மலையாள திரையுலகை சேர்ந்த 'அப்பாணி' சரத்குமார் என்கிற நடிகரை தன்னுடைய 'செக்க சிவந்த வானம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைத்துள்ளார்
கடந்த சில நாட்களாக செக்க சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் 'அப்பாணி' சரத்குமார். கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' படத்தில் அறிமுகமாகி 'அப்பாணி ரவி' கேரக்டரில் கவனிக்கவைத்தவர் தான் இந்த சரத்குமார்.
தொடர்ந்து மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல்' பாடல் இவரை பிரபலமாக்கியது. இப்போது தமிழில் 'சண்டக்கோழி-2'வில் வில்லனாக, ராஜூ முருகன் கதையில் புதியவர் சரவணன் ராமச்சந்திரன் இயக்கும் படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம் அப்பாணி சரத்.