பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், கடந்த மார்ச் 1ந் தேதி முதல் புதிய படங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளது. தியேட்டர்களில் படத்தை திரையிடும் கியூப் கட்டண உயர்வை கண்டித்து இந்த நிலைப்பாட்டை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு தியேட்டர் அதிபர்கள் சங்கம் ஆதரவு தரவில்லை.
இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர்களின் அவசரக்கூட்டம் சென்னையில் நடந்தது. இதில், தமிழக அரசு ஏற்கெனவே ஒப்புக் கொண்ட சில விஷயங்களுக்கு ஒரு வார காலத்திற்குள் அரசு ஆணைபிறப்பிக்காத பட்சத்தில் மார்ச் 16 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை திரையரங்குகளை மூடுவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு...
1.8% கேளிக்கை வரி முற்றிலுமாக ரத்து
சீட்குறைப்பு அனுமதி
லைசென்ஸ் 3 வருடத்துக்கு ஒரு முறை ரெனிவல்
TMC - A/C க்கு 5 ரூபாய் Non A/C க்கு 3 ரூபாய் வழங்க வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளுக்கு ஏற்கெனவே அரசு ஒப்புக் கொண்ட அடிப்படையில் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். ஒரு வார காலத்திற்குள் அரசு ஆணை பிறப்பிக்காத பட்சத்தில் மார்ச் 16 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை திரையரங்குகளை மூடுவது.
தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், நமக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. நமது போராட்டம் தமிழக அரசுடன் தானே தவிர தயாரிப்பாளர்களுடன் இல்லை.
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட்டுக் குழு அமைப்பதற்கு பொதுச் செயலாளருக்கு அனுமதி. அனைத்து மாவட்ட தலைவர்களுடன் பொதுச் செயலாளர் கலந்து ஆலோசித்து குழு அறிவிக்கப்படும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.