'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி-2 படம், 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28ல் வெளியானது. அதையடுத்து பல மாதங்களுக்குப் பிறகு தான் அடுத்த படியாக ஜூனியர் என்டிஆர், ராம்சரணை வைத்து ஒரு மல்டி ஹீரோ கதையை படமாக்கப் போவதாக தெரிவித்தார் ராஜமவுலி. தற்போது அந்த படத்திற்கான பிரீ-புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது.
தனது புதிய படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி, தற்போது ஜூனியர் என்டிஆர் - ராம் சரணுடன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்குள்ள வித்தியாசமான லொகேசன்களில் போட்டோ சூட் நடத்துகிறார். இந்த போட்டோ சூட் ஒரு வாரம் அங்கு நடக்கிறதாம்.