திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேசியதாவது: உங்கள் வாழ்வை மாற்றியமைக்கும் சக்தி அரசியலுக்கு உள்ளது. அரசியலை அனைவரும் தெரிந்து கொண்டு அதனை கண்காணிக்க வேண்டும். மக்களாட்சியை மாணவர்கள் தான் மலர வைக்க வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியல் பயணத்தை துவங்கியுள்ளேன். மகளிர் தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும். மாணவர் சமுதாயத்தோடு இணைந்து மீண்டும் கற்றுகொள்ள விரும்புகிறேன். மக்கள் நீதி மய்யத்தில் இளைஞர்களை அதிகம் வரவேற்கிறேன்.
மய்யம் என்பது எது சரி என தெரிந்து அந்த பக்கம் செல்வது. மய்யத்தில் இருப்பது என்பது நேர்மையாக இருப்பதற்கு சமம். வீட்டு சாவி கொடுக்கும் பெண்களிடம் நாட்டை ஒப்படைப்பதில் ஏன் தயங்க வேண்டும். நான் பெண்களை கொண்டாடுகிறவன். பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள். இதனை பல காலமாக முன்னோர்கள் சொல்லி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
போஸ்டர் வேண்டாம்
இதனிடையே, மகளிர் தினத்தையொட்டி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநாடு நடைபெற இருக்கிறது. இதுகுறித்து கமல் தன் டுவிட்டரில், "இன்று மாலை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் மகளிர் தின விழாவிற்கு அனைவரும் வருக. மக்களுக்கு இடையூறு இல்லாதிருக்க, நம்மவர்கள் போஸ்டர்கள், பேனர்கள், பதாகைகளைத் தவிர்க்கவும்" என கூறியுள்ளார்.