பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காமெடி நடிகர்களுக்கென்று நட்சத்திர அந்தஸ்த்தை உருவாக்கிய நடிகர் சந்திரபாபு. ஒரு படத்தில் நடிக்க அந்த படத்தின் ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்கியவர். அவர் காமெடி நடிகர், பாடகர் என்பது மட்டுமே பலரும் அறிந்தது. ஆனால் அதையும் தாண்டி அவர் ஒரு சகலகலாவல்லவர் என்பது பலருக்கு தெரியாது.
தமிழ் சினிமாவில் யதார்த்த மொழி பேசி நடித்த முதல் நடிகர். சென்னை மக்களின் மெட்ராஸ் பாஷையை திரைக்கு கொண்டு வந்தவர் அவர். கவலை இல்லாத மனிதன், குமாராஜா படங்களை இயக்கினார். தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடித்தார். (மாடிவீட்டு ஏழை படத்தை தயாரிக்கும்போது எம்.ஜி.ஆருடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் பொருளாதார சிக்கலுக்கு உள்ளானார்).
தமிழ் சினிமாவில் மேற்கத்திய நடனங்களை ஆடிய முதல் நடிகர் அவர். ராக் உள்ளிட்ட 13 வகையான மேற்கத்திய நடனங்கள் அவருக்குத் தெரியும், பியானோ வாசிப்பதில் வல்லவர். படத்தின் தான் நடிக்கும் காட்சியை மட்டும் கேட்டுவிட்டு ஆன்தி ஸ்பாட்டில் சொந்தமாக வசனம் பேசி நடிக்கிறவர்.
தனது நடனத்தை தானே வடிவமைத்துக் கொள்கிறவர். ரிகல்சலில் செய்யாத மூவ் மெண்டுகளை ஷாட்டில் செய்து அசத்துகிறவர். பல பாடல்களையும் எழுதியிருக்கிறார். நடிகர், நடன கலைஞர், நடன இயக்குனர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசை கலைஞர், பாடலாசிரியர் என சகலகலாவல்லவராக திகழ்ந்த சந்திரபாபு நினைவு தினம் இன்று.