இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ஞ் கிரியேஷன் நிறுவனம் தயாரித்த முதல் படம் மேயாத மான். இதனை அவரது உதவியாளர் ரத்ன குமார் இயக்கி இருந்தார். வைபவ், பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா உள்பட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார் இசை அமைத்திருந்தனர், விது அய்யனா ஒளிப்பதிவு செய்திருந்தனர். திருமணத்தை வெறுக்கும் ஒரு இளைஞனின் கதை.
இந்தப் படம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்தது. ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலும் பெரிய அளவில் வசூலிக்கவில்லை. 25 நாட்கள் வரை ஓடி தியேட்டரை விட்டு வெளியேறியது. இந்த நிலையில் இந்தப் படம் இப்போதும் மீண்டும் திரையிடப்பட்டிருக்கிறது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கடந்த 1ந் தேதி முதல் கியூப் நிறுவன கட்டண உயர்வை கண்டித்து புதிய படங்களை வெளியிடுவதில்லை என்று அறிவித்திருந்தார்கள், அதனால் புதிய படங்கள் கிடைக்காமல் தியேட்டர்களில் காட்சிகளை குறைத்து வருகிறார்கள். இதை பயன்படுத்தி தனது மேயாத மான் திரைப்படத்தை மீண்டும் திரையிட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். சென்னையில் மட்டும் 20 தியேட்டர்களில் மீண்டும் திரையிடப்பட்டிருக்கிறது.