'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இப்படி ஒரு ரசிகையா என அதிர்ந்து போய் இருக்கிறார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்.. மலபார் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த நிஷி ஹரிச்சந்திரா திரிபாதி என்கிற பெண் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகையாம்.. தனது தாயுடன் வசித்துவந்த இவர் கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தவர் சமீபத்தில் காலமானார்.
அவரது வங்கி கணக்கு மற்றும் லாக்கரை ஆய்வு செய்த வங்கி அதிகாரிக்கு, அவர் தனது இருப்பில் உள்ள பணம், லாக்கரில் உள்ள தனது பொருட்கள் அனைத்தும் சஞ்சய் தத்துக்கே சொந்தம் என உயில் எழுதி வைத்திருந்தது தெரிய வர அதிர்ச்சியானாராம்.
சஞ்சய் தத்தை அழைத்து இந்த விவரத்தை சொல்ல, ரசிகையின் அன்புகண்டு நெகிழ்ந்துபோன சஞ்சய் தத், அந்த ரசிகையின் பணம், பொருட்களை எல்லாம் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கே கொடுத்து விடும்படி ஏற்பாடுகளை செய்துவிட்டாராம்.