'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திரையுலகத்திலிருந்து அரசியலுக்கு சென்ற சிலர் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ, எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல்வாதிகளாக பெயர் எடுத்திருக்கிறார்கள்.
எம்ஜிஆர், என்டிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மட்டும்தான் மக்கள் முதல்வர் பதவிகளையும் கொடுத்து அழகு பார்த்தார்கள். ஹிந்தியில் அமிதாப்பச்சன், தெலுங்கில் சிரஞ்சீவி ஆகியோர் அரசியலில் இறங்கி, 'சீச்சீ...இந்தப் பழம் புளிக்கும்' என அரசியலை விட்டே ஒதுங்கினார்கள்.
இருந்தாலும் தமிழ்நாட்டில் தற்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரின் அரசியல் பிரவேசம் நடந்தேறியிருக்கிறது. கர்நாடகாவில் கன்னட நடிகரான உபேந்திரா-வும் கடந்த அக்டோபர் மாதம் 'கர்நாடகா பிரக்நியவன்தா ஜனதா பக்ஷா' என்ற கட்சியை ஆரம்பித்தார். கட்சி ஆரம்பித்த ஐந்து மாதங்களுக்குள் ஐந்து தலைவர்களுடன் அவருடைய சொந்தக் கட்சியிலிருந்தே ராஜினாமா செய்துள்ளார்.
மகேஷ் கவுடா என்பவருடன் சேர்ந்துதான் அந்தக் கட்சியை ஆரம்பித்தார் உபேந்திரா. ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் தன் சொந்தக் கட்சியிலிருந்தே உபேந்திரா விலகிவிட்டார். விரைவில் சொந்தமாக 'பிரஜகீயா' என்ற பெயரில் ஒரு கட்சியை உபேந்திரா ஆரம்பித்து, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளாராம்.
சிரஞ்சீவி கட்சி போல உபேந்திரா கட்சியும் ஆகிவிடப் போகிறது என கன்னட, தெலுங்கு ஊடகங்கள் கிண்டலடிக்கின்றன. தமிழ்நாட்டில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் நிலைமை என்ன ஆகப் போகிறது என்றும் அவை கேள்வி எழுப்புகின்றன.