தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டைரக்டர் விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள படம் கரு. தெலுங்கு நடிகர் நாக செளரியா நாயகனாக நடித்துள்ள இந்த படம் தெலுங்கில் கனம் என்ற பெயரில் வெளியாகிறது.
இந்த படம் குறித்து சாய் பல்லவி கூறுகையில், அம்மா - மகள் இருவரும் அன்புக்காக ஏங்கும் கதையில் இந்த படம் உருவாகியுள்ளது. உணர்வுப் பூர்வமான இந்த கதையை கமர்சியல் நோக்கமில்லாமல் யதார்த்தமாக இயக்கியிருப்பது உற்சாகமளிக்கிறது. அதற்காக இந்த படத்தை தயாரித்த லைகா புரொடக்சன்ஸ் மற்றும் என்.வி.பிரசாத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் வெளியான பிறகு கருவில் நாயகனாக நடித்துள்ள நாக செளரியாவின் பாத்திரம் பெரிதாக பேசப்படும்.
இந்த படத்தில் எனது மகளாக நடித்துள்ள வெரோனிகாவிடம் நிறைய அன்பு வளர்த்து விட்டேன். அதன்காரணமாக அவளது பெற்றோரிடம் வெரோனிகாவை எனது வளர்ப்பு மகளாக கொடுத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அந்த அளவுக்கு அவளும் என் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறாள் என்கிறார் சாய்பல்லவி.