'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க என வெகு சில படங்களிலேயே நடித்துள்ளார் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ். இந்தநிலையில் தடையற தாக்க படத்தை தொடர்ந்து 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் 'ஊமை விழிகள்' படம் மூலமாக தமிழில் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார் மம்தா மோகன்தாஸ்.
பிரபுதேவா கதாநாயகனாக நடித்துவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது. ஆகாஷ் ஷாம் என்பவர் இயக்குகிறார்.
இந்தப்படத்தில் நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள மம்தா, 3௦ ஆண்டுகளுக்கு முன் வெளியான விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் படத்திற்கும், இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, பார்த்திபன் நடிக்கும் 'உள்ளே வெளியே-2'விலும் மம்தா கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.