பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பாகுபலி, பாகுபலி-2 என்ற இரண்டு மெகா படங்களை கொடுத்து இந்திய அளவில் பிரபல இயக்குனராகி விட்டார் ராஜமவுலி. அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
பாகுபலி-2விற்கு பிறகு, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ராஜமவுலி. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கயிருப்பதால் தற்போது பிரீ புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது.
இந்தப்படத்தில், ராக்ஷி கண்ணா ஒரு ஹீரோயினாக நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், சமந்தாவும் இன்னொரு நாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் சமந்தா. அந்த படத்திற்கு பிறகு தான் தெலுங்கில் சமந்தாவின் மார்க்கெட் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.