ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தெலுங்கு தயாரிப்பாளர் சுப்பராமிரெட்டி இரங்கல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். நேற்று ஐதராபாத்தில் நடந்த அந்த கூட்டத்தில் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் சிவாஜிராஜா, நடிகர்கள் ராஜசேகர், ஜெகபதி பாபு, ஆலி, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், நடிகைகள் ஜெயப்பிரதா, ஜீவிதா, அமலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஸ்ரீதேவியைப் பற்றி நினைவு கூர்ந்தனர். நிகழ்ச்சியில் நடிகை ஜெயப்பிரதா பேசும் போது ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்தது அவருடைய அதிர்ஷ்டம் என்றார்.
“நாங்கள் இருவரும் ஒரே படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் பலத்த போட்டி இருக்கும். இருவரும் தெலுங்கு, ஹிந்தியில் சேர்த்து 15 படங்களில் இணைந்து நடித்திருக்கிறோம். எங்களுக்கு இடையில் ஆரோக்கியமான போட்டி இருக்கும். யார் அற்புதமாக முகபாவத்தை வெளிப்படுத்துவது, வசனத்தைச் சரியாகப் பேசுவது என போட்டி போட்டு நடிப்போம்.
“நான் காலையில் எழுந்து டிவியைப் பார்த்ததும் பெரும் அதிர்ச்சியடைந்தேன். அது திரையுலகத்தினருக்கு மட்டுமல்ல, அவருடைய ரசிகர்களுக்கும், மக்களுக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கும்.
ஸ்ரீதேவியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஸ்ரீதேவியின் இணைந்து நடித்தது என்னுடைய அதிர்ஷ்டம். தன்னைப் போலவே மகள் ஜான்வியும் திறமையான நடிகையாக வர வேண்டும் என ஸ்ரீதேவி விரும்பினார், ஆனால், அவரது மகள் நடிகையாவதற்கு முன்பே மறைந்துவிட்டார்,” என்றார் ஜெயப்பிரதா.