ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை ஸ்ரீதேவி கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஓட்டல் குளியல் அறையில் தவறி விழுந்து இறந்தார். அவர் மது அருந்தியிருந்தாக அவரது பிரேத பரிசோதனை அறிக்கை கூறியது.
இந்த நிலையில் வருகிற 7ம் தேதி ஸ்ரீதேவி மகள் ஜான்விக்கு 20வது பிறந்தநாள் வருகிறது. இதையொட்டி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஜான்வி, என் தாயை களங்கப்படுத்தாதீர்கள் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
இதோ வரப்போகிற என் பிறந்த நாளையொட்டி, நான் உங்கள் எல்லோரிடமும் கேட்பது ஒன்று தான். உங்கள் பெற்றோரை நேசியுங்கள் என்பது தான் அது. அந்த அன்பு உங்களை ஆசீர்வதிக்கும். பெற்றோர்கள்தானே நம்மை உருவாக்கியவர்கள். என் அம்மாவை அன்புடன் நினைவு கூறுங்கள். அவரது ஆன்மாவுக்கு அமைதி கிடைக்க நீங்கள் எல்லோரும் வேண்டிக்கொள்ளுங்கள்.
என் அம்மா, என் அப்பாவின் மீது வைத்திருந்த காதல் இறவாத தன்மை கொண்டது. இந்த உலகத்தில் அவர்களது காதலைவிட பெரிதானது எதுவும் இல்லை. அந்த உணர்வுக்கு யாராவது களங்கம் விளைவிக்க முயன்றால், அது எங்கள் மனதைக் காயப்படுத்தும். நானும், என் தங்கையும் அம்மாவை இழந்திருக்கிறோம். என் அப்பாவோ தன் அன்பையே இழந்திருக்கிறார்.
என் அம்மாவுக்கு பொறாமைப்பட தெரியாது. அவருக்குத் தெரிந்தது எல்லாம் அன்பு செலுத்துவது மட்டும்தான். அவர் உங்களுக்கு நடிகை, எங்களுக்கு அம்மா, எங்கள் அப்பாவுக்கு மனைவி என்பதையெல்லாம் தாண்டி மேலானவர். என் அம்மா கண்ணியமிக்கவர், குற்றமற்றவர். அவரை இழந்த இந்த வெகு சில நாள்களில் எங்களுக்கு நம்பிக்கையும் தைரியத்தையும் தந்து கொண்டிருக்கிற உங்கள் எல்லாருக்கும் நன்றி. இவ்வாறு ஜான்வி எழுதியுள்ளார்.