மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றபோது தான் தங்கியிருந்த ஓட்டல் அறையின் குளியல் அறையில் தவறி விழுந்து இறந்தார். அவர், மது அருந்தியிருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இது குறித்து 3 நாட்கள் விசாரணை நடத்திய துபாய் போலீசார். ஸ்ரீதேவின் மரணத்தில் எந்த சந்தேகமோ, புகாரோ இல்லை. ஒரு சிறு விபத்து தான் காரணம் என்று தெரிவித்து விட்டது.
என்றாலும் ஸ்ரீதேவி மரணம் குறித்து பலரும் தங்கள் கருத்தை கூறி வருகிறார்கள். ஒரு சிறிய குளியல் தொட்டியில் எப்படி ஒருவர் மூழ்கி இறக்க முடியும். அதனால் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து மும்பை போலீசார் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று ஜெய்கோ பவுண்டேஷன் சட்டப்பிரிவு தலைவர் ஆதில் கத்ரி என்பவர் மும்பை போலீசில் புகார் செய்துள்ளார். வழக்கறிஞர் எஸ்.பாலகிருஷ்ணன் என்பவர் மராட்டிய முதல் அமைச்சகர் தேவேந்திர பட்நாவிசுக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.