மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன் இயக்கும் படம் அருவா சண்ட. பிரபல கபடி சாம்பியன் ராஜா படத்தை தயாரிப்பதோடு, ஹீரோவாகவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். இந்தப்படம் வங்கியில் கார் கடன் பெற்று அந்த பணத்தை கொண்டு தயாரிக்கப்படுவது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:
சென்னை வேளச்சேரியில் உள்ள ஸ்டேட் வங்கியில் படத்தின் தயாரிப்பாளர் ராஜா உள்பட 13 பேர் கார் கடன் வாங்க விண்ணப்பம் அளித்துள்ளனர். இதில் 9 பேருக்கு 3.3 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வங்கியில் பணியாற்றிய சித்ரா என்பவர் கடன் லோன் அனுமதிக்கும் வங்கி பாஸ்வேர்டை திருடி இந்த கடனை அளித்துள்ளார். கார் கடன் வாங்கினால் அதற்கான தொகை கார் டீலருக்கு அனுப்பப்பட வேண்டும் என்கிற விதிமுறையும் மீறப்பட்டு கடனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த முறைகேடு நடந்துள்ளது. தயாரிப்பாளர் ராஜா வங்கி அதிகாரி சித்ராவுடன் இணைந்து திட்டமிட்டு இந்த மோசடியை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முறைகேட்டை கண்டுபிடித்த வங்கி அதிகாரி கார் லோன் பெற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீசார் வழக்கு பதியவில்லை. இந்த நிலையில் வங்கி சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிமன்றம் அருவா சண்ட படத்தை வெளியிட தடைவிதித்தது.