பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன் இயக்கும் படம் அருவா சண்ட. பிரபல கபடி சாம்பியன் ராஜா படத்தை தயாரிப்பதோடு, ஹீரோவாகவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். இந்தப்படம் வங்கியில் கார் கடன் பெற்று அந்த பணத்தை கொண்டு தயாரிக்கப்படுவது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:
சென்னை வேளச்சேரியில் உள்ள ஸ்டேட் வங்கியில் படத்தின் தயாரிப்பாளர் ராஜா உள்பட 13 பேர் கார் கடன் வாங்க விண்ணப்பம் அளித்துள்ளனர். இதில் 9 பேருக்கு 3.3 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வங்கியில் பணியாற்றிய சித்ரா என்பவர் கடன் லோன் அனுமதிக்கும் வங்கி பாஸ்வேர்டை திருடி இந்த கடனை அளித்துள்ளார். கார் கடன் வாங்கினால் அதற்கான தொகை கார் டீலருக்கு அனுப்பப்பட வேண்டும் என்கிற விதிமுறையும் மீறப்பட்டு கடனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த முறைகேடு நடந்துள்ளது. தயாரிப்பாளர் ராஜா வங்கி அதிகாரி சித்ராவுடன் இணைந்து திட்டமிட்டு இந்த மோசடியை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முறைகேட்டை கண்டுபிடித்த வங்கி அதிகாரி கார் லோன் பெற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீசார் வழக்கு பதியவில்லை. இந்த நிலையில் வங்கி சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிமன்றம் அருவா சண்ட படத்தை வெளியிட தடைவிதித்தது.