பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
பிரேமம் சாய் பல்லவி, கதை விசயத்தைப் போலவே கால்சீட் விசயத்திலும் ரொம்ப கறார் பேர் வழியாக இருப்பதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், கரு படத்தில் சாய் பல்லவியின் மகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த குழந்தை நட்சத்திர நடிகை திடீரென்று நடிக்க மறுத்ததை அடுத்து, அவசரகதியில் மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்த வேரோனிகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் டைரக்டர் விஜய்.
ஆனால் இந்த விசயம் சாய்பல்லவிக்கு தெரிந்தால், புதிய சிறுமியுடன் நடிக்க தயங்குவார் என்பதால் அவரிடம் அதுபற்றி சொல்லாமலேயே அவரை ஸ்பாட்டுக்கு வரவைத்திருக்கிறார் டைரக்டர் விஜய். அதோடு அவர் கால்சீட் விசயத்தில் கறார் நடிகை என்பதால், இந்த விசயத்தை அவரிடம் சொல்லாமல் இருந்திருக்கிறார்.
ஆனால் ஏற்கனவே தன்னுடன் ரிகர்சல் பார்க்க வந்திருந்த சிறுமி இல்லாமல் வேறு சிறுமி ஸ்பாட்டில் நிற்பதைப் பார்த்த சாய் பல்லவி அதிர்ச்சியடைந்து விட்டாராம். அதையடுத்து டைரக்டர் விஜய்யிடம் கேட்டபோது அந்த சிறுமி நடிக்க மறுத்து விட்டதை கூறியிருக்கிறார். அப்போது, இந்த சிறுமியிடம் நான் சில நாட்கள் பழகிய பிறகு படப்பிடிப்பை வைக்கலாமே. அதற்குள் என்ன அவசரம் என்று கூறியிருக்கிறார். அதோடு, தேவைப்பட்டால் நான் எக்ஸ்ட்ரா கால்சீட் தருகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
அதன் பிறகுதான் மற்றவர்கள் சொன்னது போன்று இல்லை. சூழ்நிலைக்கேற்ப அணுசரித்து நடந்து கொள்ளும் நல்ல நடிகைதான் சாய்பல்லவி என்பது டைரக்டர் விஜய்க்கு தெரிய வந்திருக்கிறது.