சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகை அமலாபால். இயக்குநர் விஜய்யை விவாகரத்து செய்த பின்னர் மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் நடந்த கண் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அமலாபால், தனது கண்களை தானமாக வழங்கினார். இந்நிலையில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவ அமலா ஹோம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி உள்ளார் அமலாபால்.
இதுகுறித்து அமலாபால் கூறுகையில், உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். 70 சதவிகிதம் குணப்படுத்த கூடியவை. இதற்கு பெரும் தடையாக இருப்பது கண் தானம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது தான்.
நான் எனது கண்களை தானம் செய்வது மட்டுமில்லாமல், இந்த கண்தான பற்றாக்குறையை நீக்கவும், அறுவை சிகிச்சைகளுக்கு நிதி திரட்டவும் அமலா ஹோம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் அனைவருக்கும் கண் பார்வை கிடைக்கும்படி செய்து நமது அழகான, மிக வேகமாக வளர்ந்து வரும் நமது தேசத்தை அவர்களையும் காண வைக்கலாம்.
இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.