விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழகம் - கர்நாடகம் இடையே ஆண்டுக்கணக்காக பிரச்னைகள் நீடித்து வரும் நிலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் தமிழகத்திற்கான தண்ணீர் அளவு 177.25 டிஎம்சிஆக குறைக்கப்பட்டது. அதோடு காவரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் மத்திய அரசு பிடி கொடுக்காமல் இருக்கிறது. கர்நாடக அரசும் தண்ணீர் திறக்க மாட்டோம் என பிடிவாதம் பிடிக்கிறது.
இதுதொடர்பாக, கமல்ஹாசன் தன் மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்போது டுவிட்டரிலும் ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில், "மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம். மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு".
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.