டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உண்மையான ரசிகர்கள் பலர் இருந்தாலும், யாருமே இயக்குனர் ராம் கோபால் வர்மாவை மிஞ்ச முடியாது. ஸ்ரீதேவி மறைந்த அந்த நிமிடத்திலிருந்து தொடர்ந்து அவரைப் பற்றி டுவீட்டுகளைப் பதிவிட்டார் ராம் கோபால் வர்மா. அது மட்டுமல்ல இரண்டு கடிதங்களை உணர்வு பூர்வமாக எழுதி, ஸ்ரீதேவி மேல் அவருக்கிருந்த அபிமானத்தை அற்புதமாக வெளிப்படுத்தினார்.
கடந்த இரண்டு நாட்களாகவே ஸ்ரீதேவியின் சுயசரிதையை ராம்கோபால் வர்மா திரைப்படமாக எடுக்கப் போகிறார் என சில தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், அவற்றை மறுத்து மீண்டும் ஸ்ரீதேவி பற்றி ஒரு அழுத்தமான பதிவை வெளியிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா.
அதில், “ஸ்ரீதேவியின் சுயசரிதையை நான் படமாக உருவாக்கப் போகிறேன் என சில மீடியாக்கள் சொல்வதில் உண்மை இல்லை. அது முட்டாள்தனமானது என நான் நினைக்கிறேன். மேலும், ஸ்ரீதேவி போல் நடிக்க இங்கு யாருக்குமே தகுதியில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.
ராம்கோபால் வர்மா மனதில் ஸ்ரீதேவி எந்த அளவிற்கு ஆழமாகப் பதிந்திருக்கிறார் என்பது இதில் இருந்தே தெரிகிறது.