ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைக்கு ஸ்டார் குடும்பம் என்று சொன்னால் அது சூர்யாவின் குடும்பமாகத்தான் இருக்கும். சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோரில் சிவகுமார் மட்டும் தற்போதைக்கு நடிப்பதை விட்டுவிட்டார். மற்றவர்கள் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கிறார்கள்.
சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் வெளி தயாரிப்பாளர்களின் படங்களில் அதிகமாக நடிப்பதேயில்லை. அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அவர்களே ஐந்தாறு தயாரிப்பு நிறுவனங்களை நடத்திக் கொண்டு அதிலேயே மாறி மாறி நடித்துக கொள்கிறார்கள்.
சூர்யா கடைசியாக நடித்த 'மாசு என்கிற மாசிலாமணி, 24, சி 3, தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களும் அவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கம் படமும் அப்படிப்பட்ட தயாரிப்புகள்தான்.
ஜோதிகா கடைசியாக நடித்த '36 வயதினிலே, மகளிர் மட்டும்' ஆகிய படங்களும் அப்படித்தான் தயாரிக்கப்பட்டன.
கார்த்தி கடைசியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படமும், தற்போது தயாராகி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படமும் அவர்களது குடும்பத் தயாரிப்புகள்தான்.
அந்த வரிசையில் இன்று கார்த்தி நடிக்கும் 17வது படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவும் குடும்பத் தயாரிப்புதான்.
விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் கூட மற்றவர்களின் தயாரிப்பில் நடிக்கும் போது சூர்யாவின் குடும்பத்தினர் பெரும்பாலும் அவர்களது தயாரிப்புகளிலேயே நடிக்கின்றனர்.
சூர்யா, கார்த்தி ஆகியோரைப் பார்த்து தற்போது வளர்ந்து வரும் பல நடிகர்களும் அவர்கள் வழியில் பயணிக்க ஆரம்பித்தால் தமிழில் தயாரிப்பாளர்களே இருக்க மாட்டார்கள்.