அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தீரன் கார்த்தியும், நவரச நாயகன் கார்த்திக்கும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். கார்த்தியின் 17வது படம் இது. இன்னும் தலைப்பு வைக்கவில்லை. தீரன் அதிகாரம் ஒன்றில் கார்த்தியுடன் இணைந்து நடித்த ரகுல் ப்ரீத்தி சிங், மீண்டும் இணைகிறார். இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்ஜே.விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ரஜத் ரவிசங்கர் என்ற புதுமுகம் இயக்குகிறார். இவர், எங்கேயும் எப்போதும் சரவணன், ஆர்.கண்ணன், ஹிந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார், ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சிங்கம் 2, மோகினி படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மண்குமார், ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்டுடன் இணைந்து தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் வருகிற 8ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. ஐதராபாத், மும்பை மற்றும் இமயமலை பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் 15 நாள் படப்பிடிப்பு நடக்கிறது. கார்த்தி படங்களில் இது பெரிய பட்ஜெட் படம் என்கிறார்கள்.