ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார் தனது முதல் படத்திலேயே வெற்றிபெற்றார். அதனால் திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ள கோபி நயினார் அடுத்தும் நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். அந்தப் படம் தொடங்க தாமதமாகும் என்பதால், அதற்கு முன் வேறு ஒரு படத்தை இயக்குகிறார்.
அவரது அடுத்த படம் என்ன? யார் ஹீரோ? சித்தார்த்தை வைத்துத்தான் கோபி நயினார் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் இப்போது திடீர் திருப்பமாக கோபி நயனார், அடுத்து இயக்கும் படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் குமார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
கோபி நயினார் சில வருடங்களுக்கு முன் இயக்க ஆரம்பித்து பின்னர் டிராப் பண்ணிய கருப்பர் நகரம் படத்தைத் தான் தற்போது இயக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகவிருக்கிறது.