600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
கபாலி படத்தால் ஏற்பட்ட நஷ்டத் தொகையை தராமல் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இழுத்தடிப்பதாக சினிமா விநியோகஸ்தர் செல்வக்குமார் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித் செல்வகுமார் கூறியதாவது.... தென் ஆர்காடு மற்றும் புதுச்சேரி ஏரியாவில் கபாலி படத்தை திரையிட தாணுவிடம் ரூ.5.50 கோடி கொடுத்து உரிமையை பெற்றேன். ஆனால் படம் வெளியாகி ரூ.2.77 கோடி மட்டுமே வசூலை ஈட்டியது. இதனால் எனக்கு ரூ.2.73 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தாணுவிடம் கேட்டபோது ரூ.1.50 கோடி தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் 20 மாதங்களாகிவிட்டது, பணத்தை கொடுக்கவில்லை. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். இன்றைய சூழலில் அவர் பணத்தை தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.