'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புதிதாக மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்துள்ள கமல், கட்சியின் 10 பேர் கொண்ட மாநில பேச்சாளர்கள் கொண்ட பட்டியலை பெயரை அறிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், பிப்.,21ம் தேதி அரசியல் களத்தில் இறங்கினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் தனது அரசியல் பயணத்தை துவக்கினார். மதுரை மாநாட்டில் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் வைத்து கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து அரசியில் வேலைகளில் கமல் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தனது கட்சிக்கு 10 பேர் கொண்ட பேச்சாளர்களை கமல் அறிவித்துள்ளார். அவர்கள் விபரம் வருமாறு...
10 பேர்:
ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி மவுரியா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், முரளி அப்பாஸ், கமிலா நாசர், பட்டிமன்ற பேச்சாளர் ஞான சம்பந்தன், ரங்கராஜன், ஆர்.ஆர்.சிவராமன், சவுரி ராஜன், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் கவிஞர் சினேகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.