மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் அடுத்து இயக்கி வரும் செக்சச் சிவந்த வானம். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீசுடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
தொழிற்சாலை கழிவுகளால் விவசாயம் பாதிக்கப்படுவதும், மக்கள் நோய்களால் பாதிக்கபடுவதுமான பின்னணியில் படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்புகள் சென்னையை சுற்றியுள்ள மூடப்பட்ட தொழிற்சாலைகளில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சிம்பு, மற்றும் அரவிந்த்சாமி பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், படப்பிடிப்பு தொடர்பான படங்களை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதோடு "எப்போதும் புதுமை விரும்பும் மணிரத்னம், இதிலும் அந்த பாணியை பின்பற்றுகிறார். படத்தை வேகமாக முடிக்க மொத்த டீமும் உழைத்து வருகிறோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.