டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை ஸ்ரீதேவி உடல் ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலியுடனும், மகாராஷ்டிரா மாநில அரசின் மரியாதையுடனும் தகனம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் பிறந்து தென்னிந்தியாவில் கனவு கன்னியாக வலம் வந்து, பாலிவுட்டிலும் பிரபலமாகி முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்ற நடிகை ஸ்ரீதேவி, எதிர்பாரதவிதமாக கடந்த சனிக்கிழமை அன்று துபாயில் மரணம் அடைந்தார். உறவினரின் திருமண நிகழ்வுக்காக சென்றிருந்த ஸ்ரீதேவி அங்கு தங்கியிருந்த ஹோட்டல் அறையின் பாத்ரூமில் தடுமாறி, குளியல் தொட்டியில் விழுந்து மரணம் அடைந்தார்.
துபாய் அரசு, ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இல்லை என அறிவித்து பிரேத பரிசோதனை, எம்பாமிங் போன்றவகளை முடித்து நேற்று உடலை ஒப்படைத்தது. அதன்பின்னர், தனி விமானம் மூலம் ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு 10.30 மணியளவில் மும்பை வந்தது. அவரது உடல் மும்பையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 9.30 மணிக்கு மும்பை செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சல்மான் கான், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா, ஜெயா பச்சன், ஜான் ஆபிரஹாம், அஜய் தேவ்கன், கஜோல், சாகித் கபூர், சித்தார்த் மல்கோத்ரா, தபு, சுஷ்மிதா சென், விவேக் ஓபுராய், பூமிகா, நீல் நிதின் முகேஷ், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரோஜ் கான், ரேகா, ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக நேற்று முன்தினம் ரஜினி, கமல், நாசர் உள்ளிட்ட தமிழ் பிரபலங்களும் ஸ்ரீதேவி மகளிடம் ஆறுதல் கூறினர்.
பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா மற்றும் இந்திய சினிமாவில் பல திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் மட்டுமல்லாது, அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோரும் ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நண்பகல் 2 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஸ்ரீதேவியின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மும்பை, வில்லேபார்லே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாநில அரசு மரியாதையுடன், மாலை 5.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
16 வயதினிலே படத்தில் செந்தூரப்பூவே செந்தூரப்பூவே... என ரசிகர்களை மயக்கிய ஸ்ரீதேவி, இன்று காற்றோடு கலந்துவிட்டார். ஆனால் அவர் நடித்த படங்கள் என்றும் ரசிகர்களை விட்டு நீங்காது என்பது மட்டும் திண்ணம்.