ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தியேட்டர்களில் டிஜிட்டல் முறையில் திரைப்படங்களைத் திரையிடும் நிறுவனங்களுக்கும் தென்னிந்தியத் திரையுலகினருக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே மோதல் இருந்து வருகிறது. ஒவ்வொரு புதுப்படம் வெளிவரும் போதும் தியேட்டர்களில் படங்களைத் திரையிட அவர்கள் வாங்கும் கட்டணம் அதிகம், அவற்றைக் குறைக்க வேண்டும் என திரையுலகினர் கோரி வந்தார்கள்.
ஆனால், டிஜிட்டல் கம்பெனிகள் அதைக் குறைக்கவேயில்லை. இதனால், கோபமடைந்த திரையுலகினர் தென்னிந்திய அளவில் ஒன்று கூடி டிஜிட்டல் கம்பெனிகளின் கட்டண விகிதத்தைக் குறைத்தே ஆக வேண்டும் என்று பேசினார்கள்.
இருவருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளில் எந்தவிதமான சுமூக முடிவும் எட்டப்படவில்லை. இதனால், திட்டமிட்டபடி நாளை மார்ச் 1ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடப் போவதில்லை என தென்னிந்தியத் திரையுலகினர் முடிவு செய்தனர்.
தெலுங்குத் திரையுலகமும், தமிழ்த் திரையுலகமும் இதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், கன்னட, மலையாள உலகினர் இன்னும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து உறுதி செய்யவில்லை.
இதனிடையே, இன்று மாலை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களுடன் கூட்டம் நடைபெற உள்ளது. அதன் பிறகு இது பற்றிய விரிவான அறிக்கை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.