தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த டிசம்பர் மாதம் மலையாளத்தில் வெளியான 'மாயநதி' படம் கிறிஸ்துமஸ் ரிலீஸ் படங்களிலேயே அதிக வரவேற்பை பெற்றது.. இந்தப்படத்தை பிரபல இயக்குனர் ஆஷிக் அபு இயக்க, வளர்ந்துவரும் இளம் நாயகன் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்திருந்தார்.
காதல் கதைகளிலேயே இது புதுமாதிரியான திரைக்கதை பாணியில் சொல்லப்பட்டிருந்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. திரையுலகினர பலரின் பாராட்டையும் பெற்றது. தற்போது இந்தப்படம் வெளியாகி 75வது நாளை தொட்டுள்ள நிலையில் நடிகர் மோகன்லால் தனது முகநூல் பக்கத்தில் இந்தப்படத்திற்கு பாராட்டு பத்திரம் எழுதியுள்ளார்.
“சமீபத்தில் தான் இந்த படத்தை பார்த்தேன். மனம் திறந்து சொல்ல வேண்டுமென்றால் உண்மைக்கு பக்கத்தில் இருந்து அழகாக நெய்யப்பட காதல் கதை தான் இந்த 'மாயநதி'. 75வது நாளை கொண்டாடும் படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார் மோகன்லால்.