தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழகத்தில் பிறந்து இந்தியா முழுக்க பிரபலமாகி, பாலிவுட்டின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரான நடிகை ஸ்ரீதேவி, எதிர்பாரதவிதமாக துபாயில், சனிக்கிழமை அன்று மரணம் அடைந்தார். அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் பாத்ரூமில் தடுமாறி, குளியல் தொட்டியில் விழுந்து மரணம் அடைந்தார்.
பிரேத பரிசோதனை, எம்பார்மிங், துபாய் அரசின் ஒப்புதல் உள்ளிட்ட பல நடைமுறைகளை கடந்து மூன்று நாட்களுக்கு பிறகு துபாயிலிருந்து ஸ்ரீதேவி உடல் நேற்று இரவு மும்பை வந்தது. முதலில் ஸ்ரீதேவியின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், இன்று காலை 9.30 மணிக்கு மும்பை செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா மற்றும் இந்திய சினிமாவில் பல திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் மட்டுமல்லாது, அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோரும் ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நண்பகல் 2 மணிக்கு மேல் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. மாலை 3.30 மணியளவில் மும்பை, வில்லேபார்லே மயானத்தில் அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.