துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த இலியானா, தற்போது பாலிவுட்டே கதி என்று கிடக்கிறார். அஜய் தேவ்கன் உடன் பாத்சாகோ படத்தில் நடித்தவர், மீண்டும் அவருடன் ரெய்டு என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் வருகிற மார்ச் 16-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலியானா, அஜய் தேவ்கனை பற்றி கூறுகையில், அஜய் தேவ்கன் உடன் தொடர்ந்து நடிப்பது குறித்து எந்த திட்டமிடலும் இல்லை. வாய்ப்பு வந்தது நடித்தேன். அஜய் தேவ்கன் படத்தில் நடிக்க விரும்புவேன். கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பார். நல்ல மனிதர், எப்போதும் பாசிட்டிவாக இருப்பவர் என்று கூறியுள்ளார்.
ரெய்டு படத்தை ராஜ்குமார் குப்தா இயக்கி உள்ளார். குமார் மங்கத் பதக் மற்றும் பூஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.