ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் கலை உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றாலும் அவர் மரணம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கவில்லை என்ற கருத்து எழுந்துள்ளது. அவர் மரணம் குறித்து தீவிரமான விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். புரியாத புதிர்களாக சில கேள்விகள் முளைத்துள்ளன.
உடல் ஆரோக்கியத்துக்கு மிகுந்த முக்கியத்தும் கொடுக்கும் ஸ்ரீதேவிக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. அதை அவர் தீவிரமாக எதிர்த்து வந்தவர். அப்படிப்பட்டவர் எப்படி மது அருந்தினார். அவராக அருந்தினாரா, அல்லது வற்புறுத்தி மது அருந்த வைக்கப்பட்டாரா? அவராக விரும்பி அருந்தியதாக வைத்துக் கொண்டால் எப்படி திடீரென அந்த பழக்கத்திற்கு ஆளானார்?
ஸ்ரீதேவி குளியல் அறைக்குள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது மாலை 6.25 மணிக்கு. அவர் இறந்து விட்டதாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது இரவு 9 மணிக்கு. துபாய் சட்டதிட்டத்தின்படி சிறிய விபத்து என்றாலும் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இத்தனை கால தாமதம் ஏன்?
ஸ்ரீதேவி தங்கியிருந்தது 7 நட்சத்திர ஓட்டல். அந்த ஓட்டலுக்கென்று தனி மருத்துவ குழு உள்ளது. அப்படி இருக்கும்போது அந்த குழுவிரை அணுகாமல் உடனடியாக வெளி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றது ஏன்?
நீரில் மூச்சு திணறி இறந்தவரை மாரடைப்பால் இறந்தார் என்று அவசர அவசரமாக அறிவிக்க வேண்டியதன் அவசியம் என்ன? இதுபோல இன்னும் சில கேள்விகளும் உள்ளன. துபாய் காவல்துறையினர். உண்மையான, விரிவான பதில் தருவார்கள் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.